சிவகங்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே. வாசன் பேட்டி!
Subscribe தமிழ்நாடு videos
மேகதாது அணை குறித்த அறிவிப்பு, கர்நாடாகவில் புதிய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழக விவசாயிகளை பலி வாங்க துடித்துக்கொண்டு இருப்பதை காட்டுகின்றது. இதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்படவேண்டும். அகில இந்தி காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு, விவசாயிகளுக்கு எதிரான பிரச்சனைகளில் ஈடுபட கூடாது என கர்நாடக காங்கிரஸ் கட்சியினரை அறிவுறுத்த வேண்டும்.சிவகங்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே. வாசன் பேட்டி.சிவகங்கையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க்க வந்த அக்கட்சியின் தலைவர் ஜிகே. வாசன் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினரின் சோதனைகள் குறித்த கேள்விக்கு, சந்தேகங்களின் அடிப்படிடையில் அமலாக்கத்துறை சார்பில் தமிழகத்தில் சோதனைகள் நடைபெறுவது புதிதல்ல. சோதனைகள் நிறைவடைந்த பின்னர் உண்மை நிலை வெளியில் வரும். என்றும், முதல்வரின் வெளிநாட்டு சுற்றுபயணம் வெறும் விளம்பரமாக இருக்க கூடாது. அதன் முடிவுகள் காலக்கொடுக்குள் இருக்கவேண்டும், தமிழகத்தில் வளர்ச்சியடைய வேண்டிய மாவட்டங்களில் புதிய தொழில் வருவதை, வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றவர், இந்தியாவிற்கு பெறுமை சேர்த்த மல்யுத்த வீரர்கள் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் என ஜிகே. வாசன் வேண்டுகோள் விடுத்தார். ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற அரசு எடுத்த முடிவு சரியானது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காது. தவறான வழியில் பணம் சேர்த்து வைத்தவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற ஜிகே. வாசன், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளை நேரவேற்ற தவறியுள்ளது. வாக்களித்த மக்கள் ஏமாந்த நிலையில் உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டிய பணியினை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என்றவர், பாஜக ஆட்சியில், இந்தியா பாதுகாப்பாகவும், படிப்படியாக வளர்ச்சி தொடக்கூடிய நாடாக மாறி கொண்டு இருக்கிறது. மக்கள் மத்திய அரசின் நல்ல பணிகளை கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கின்றனர். எந்த கட்சியும், பாஜக மற்றும் அதன் கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள முடியுமா என்ற நிலை உறுவாகியுள்ளது. என்றாலும் மூன்றாவது முறையும் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் எதிர்கட்சியினர் புதிய நாடாளுமன்ற கட்டிட துவக்க விழாவினை புறக்கணித்த்தை, அவர்களின் தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என ஜிகே. வாசன் தெரிவித்தார்.