பழனியில் திருஞானசம்பந்தர்க்கு ஞானப்பால் ஊட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது!
1013 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டது. சம்பந்தர் பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின் தங்கத்தாலான பொற்கொண்டை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஒதுவார்கள் தேவார இன்னிசை பாடல்கள் பாடினர். பின்னர் உமாமகேஸ்வரர் தம்பதி சமேதராக திருஞானசம்பந்தர் உடன் கோயிலின் வடக்குப்பிரகாரம் எழுந்தருள அங்கு சுவாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்கத்தாலான பொற்கிண்ணத்தில் இருந்த பால் பொற்கரண்டி மூலம் சுவாமிக்கு ஊட்டப்பட்டது. பின் சுவாமி நான்கு ரத வீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டுமகிழ்ந்தனர்.