மேகதாதுவில் அணை கட்டினால் அணையை இடிப்போம் வேலுச்சாமி பேட்டி
மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்யப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்க்கு தமிழக முதல்வர் சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக விவசாய சங்க தலைவர் வேலுச்சாமி ஆரணியில் பேட்டிஅதையும் மீறி அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து அணையை இடித்து தகத்திடுவோம் என்று கண்டனம் தெரிவித்தார்கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராகடி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்று கொண்டனர் துணை முதல்வராக உள்ளடி.கே.சிவகுமார் அம்மாநிலத்தின் நீர்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்புவழங்கப்பட்டுள்ளதுஇந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர்டி.கே.சிவகுமார் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதி அனைத்தும்உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டமேகதாது ஆணையை கட்ட ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து அணை கட்ட முயற்சிசெய்வேன் என்று தெரிவித்தார் இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்ததமிழக விவசாய சங்கத் தலைவர் வேலுச்சாமி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டமுயர்சி செய்வோம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு கண்டனம்தெரிவித்தார் அது மட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பில் சட்டவல்லுனர்களிடம் ஆலோசித்து சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழகமுதல்வருக்கு கோரிக்கை வைத்தார்அதையும் மீறி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் உள்ளஅனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளை வைத்து அணையை இடித்துதகத்திடுவோம் என்று எச்சரித்தார்tamilnaduTimesXP TamilUpdated: 1 Jun 2023, 11:10 am