கூரை வீடு முற்றிலும் கொழுந்துவிட்டு எரிந்தது
1086 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூர் தெற்கு தெரு கொல்லந்திடல் பகுதியை சேர்ந்தவர் தேவிகா(55). கணவனை இழந்த இவர் தன்னுடைய கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தேவிகா தனது வீட்டை பூட்டை விட்டு அருகாமையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நேற்று இரவு அவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ ப்ரிட்ஜ் டிவி உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கூரைவீடு கொழுந்துவிட்டு எரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதேனும் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்