நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை!
1020 views
Subscribe தமிழ்நாடு videosதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பாலையூர், புத்தூர், செல்லூர், நாகூர், தெத்தி உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட இடங்களிகளில் இடியுடன் கனமழை பெய்தது இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் கடும் வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் தற்பொழுது கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.