குறை தீர் கூட்டம், தையல் மிஷின் வழங்கிய தமிழக அரசு!
1057 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்ட எல்லையோர கிராமத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. திமுக அரசு பொறுப்பேற்ற பின் கிராமங்கள் தோறும் மக்கள் குறை தீர் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து துறை அதிகாரிகளும் வந்து கிராமமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இன்று சிவகங்கை மாவட்ட எல்லையோர கிராமமான அன்னவாசலில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, டிஆர்ஓ மணிவண்ணன், ஆர்டிஓ சுகிதா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் வருகை தநது பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்த 8 பெண்களுக்கு சமூக நலத்துறை மூலம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தையல் இயந்திரங்கள் பெற்ற பெண்கள் சிரிப்புடன் தையல் இயந்திரங்களை பெற்று சென்றனர். விவசாயிகளுக்கு பவர் டில்லர் , உயிர் உரம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாற்றம் செய்யப்பட்டதால் இன்று கிராமத்திற்கு வந்த அவருக்கு கிராமமக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. எம் எல்ஏ தமிழரசி, எம்பி கார்த்திக்சிதம்பரம் உள்ளிட்டோர் கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.