10 முயல்களை மீட்ட வனத்துறையினர்
1103 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி தெற்கு குடியிருப்பில் ஒரு வீட்டில் காட்டு முயல் கறி விற்பனை செய்வதாக காரைக்குடி ASP ஸ்டாலின் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனைத் தொடர்ந்து அவரது தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணித்த பொழுது காளிதாஸ் என்பவர் வீட்டில் வைத்திருந்த பத்து காட்டு முயல்கள் மற்றும் உண்பதற்காக சமைத்து வைத்திருந்த புனுகு பூனை கறி ஆகியவற்றை கைபற்றி காளிதாஸ் என்பவனை பிடித்த தனிப்படை காவல்துறையினர் காளிதாஸ் மற்றும் கைப்பற்றப்பட்ட 10 காட்டு முயல்களை வனத்துறையினரிடம்ஒப்படைத்தனர் மேலும் காட்டு முயல் புனுகு பூனை ஆகியவற்றை வேட்டையாடியதாக காளிதாஸ் கூட்டாளிகளான காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விஜய் இலுப்பக்குடியை சேர்ந்த நாச்சியப்பன் மற்றும் பூமிநாதன் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.