பழ கடைகளில் சோதனை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
1207 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் பழ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோடை காலத்தில் பொதுமக்கள் பலரும் இயற்கை பானங்களையும் பழங்களையும் விரும்பி சாப்பிடுவார்கள். இவர்களை குறிவைத்து பலரும் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்த விற்பனை செய்வதுடன் அதில் இருந்து பழரசங்கள¢ தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் பழகடைகளில் சோதனை நடத்தி செயற்கை முறையில் பழுக்க வைத்த வாழைப்பழங்கள், மாம்பழங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர் .. விதிகளை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்திய 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை நடத்தினார்.