பழங்குடியின சமூகத்தில் முதன்முதலாக 12ம்வகுப்பு படித்து தேர்ச்சி!
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள பழமலை நகரரை சேர்ந்த ஊசி பாசி விற்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தங்க பாண்டி. இவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 438 மார்க் எடுத்து தமது பழங்குடியின சமூகத்தில் முதன் முதலாக 12வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 438 மார்க் எடுத்து பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவருக்கு தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து புத்தகம் பரிசளித்தனர்.சிவகங்கை பழமலை நகரில் 200க்கும் மேற்பட்ட ஊசி பாசி விற்கும் பழங்குடியின சமூகம் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது இந்த சமூகத்தை சார்ந்த குழந்தைகள் அதிக அளவில் பள்ளி சென்று படித்து வருவதும் அதில் படிப்பில் முன்னேறுவதும் இவர்களை கல்வியால் இவர்களுடைய வாழ்க்கையை தற்போது மாறி வருகின்றது. இந்த பழமலை நகரை சேர்ந்த ஜெயபாண்டி மகன் தங்கப்பாண்டி என்பவர் இந்த சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தப் பகுதியிலேயே முதன் முதலாக சிவகங்கை மன்னர் மேல் நிலைபள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வில் 438 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல் இந்த சமூகத்தில் நாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றும் எங்களாலும் முன்னேற முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார். இந்த மாணவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆசை உள்ளதாகவும் இனி எங்களுடைய வருங்கால சந்ததிகள் மேல்படிப்புகள் செல்வார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு மிகவும் உதவிய ஆசிரியர்கள் உறவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பாக இந்தப் பகுதியில் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்களை எல்லாம் பள்ளிக்கு இலவசமாக அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் சங்கரை நாங்கள் மறக்க மாட்டோம் என்றும் கூறினார்.ஜெய பாண்டியன் தந்தை தங்கபாண்டி கூறும் பொழுது எங்கள் சமூகத்தில் இருந்து முதன்முதலாக என்னுடைய மகன் 12 வது தேர்ச்சி பெற்று அதுவும் 438 மார்க் வாங்கியுள்ளான். இனி எங்கள் சமூகமும் உயர்ந்த இடத்திற்கு செல்லும் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன், மாநிலச்செயலர் செல்வக்குமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ், சரண்யா, மாவட்டச் செயலர் குணசேகரன், முத்துக்குமார், ஒன்றியத்தலைவர் ராஜாமணி, முத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முகேஷ், மூக்கையா ஆகியோர் கலந்துகொண்டனர்.tamilnaduTimesXP TamilUpdated: 10 May 2023, 5:17 pm