காங்கிரஸ் மற்றும் திமுக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
1012 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் புதிய இரயில் நிலையம் முன்பு கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறது இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இன்றைய சூழலில் கர்நாடகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் அண்மையில் கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநில துணை முதல்வரின் இத்தகைய அறிவிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர் ஆனால் இதனை தட்டிக் கேட்க வேண்டிய திமுக தலைமையிலான தமிழக அரசு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து இருப்பதால் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது.இத்தகைய விவசாய விரோத போக்கை கொண்டுள்ள கர்நாடக அரசை கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தினர் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கர்நாடக அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் திமுக அரசு இதனை தட்டிக் கேட்க வேண்டி வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினார்.