மது போதையில் அராஜகம்-சந்தையை திறக்காமல் ஐந்து மணி நேரம் காக்க வைப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
1056 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கி திங்கட்கிழமை அதிகாலை வரை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் கரூர். திருப்பூர். கோயம்புத்தூர்.ஈரோடு திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பசு மாடு மற்றும் எருமை மாடு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவதும் அதேபோல் விவசாயிகள் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்க வருவதும் வழக்கம் கடந்த சில வருடங்களாக வாரச்சந்தை ஒட்டன்சத்திரம் நகராட்சியால் ஏலம் விடப்பட்டு தனியார் நடத்தி வந்தனர் இதில் மிகப்பெரிய முறைகேடும் தொடர்ந்து விவசாயிகளை மிரட்டுவதும் அதிகளவு பணம் வசூல் செய்வதும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் புகார் செய்து வந்தனர் இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் நகராட்சியால் மாட்டுச்சந்தை ஏலம் விடப்பட்டது சந்தையில் யாரும் இருக்காதால் தற்போது சந்தையை நகராட்சி நிர்வாகம் நேரடியாக நடத்தி வருகிறது இந்நிலையில் நேற்று மாலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை கொண்டு வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நகராட்சி அதிகாரிகள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை இதன் காரணமாக மூணு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வாகனங்களில் கால்நடைகளை சாலை ஓரத்தில் நிறுத்தியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது மேலும் வார சந்தையை வேகமாக திறக்க வேண்டும் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது மேலும் வார சந்தையில் ஒரு சிலர் மதுபோதையில் அராஜகம் செய்து வருவதாகவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றன.