“ஊட்டச்சத்தை உறுதி செய்” - சிறப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்!
1051 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” - சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத் துறையின் சுடீளுமு குழுவும் இணைந்து நடத்தி வரும், சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷாஅஜீத்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது மட்டுமன்றி, புதிதாகவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து, பயன்பெறச் செய்து வருகிறார்கள்.அதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகளின் கீழ் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 0 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் 0 முதல் 6 வயது வரையிலான 69,011 குழந்தைகளும், 6,052 கர்ப்பிணி தாய்மார்களும், 5,485 பாலூட்டும் தாய்மார்களும் பயனாளிகளாக பதிவு செய்யபபட்டு பயன்பெற்று வருகின்றனர். இவர்களில் 6 மாதத்திற்குட்பட்ட பிறப்பு எடை குறைபாடுடைய மற்றும் 877 கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என சுகாதார துறை மூலம் செயல்பட்டு வரும் தேசிய குழந்தை நலத்திட்டம் (RESK) மருத்துவக்குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்டறியப்பட்டுள்ளனர்.மேலும், 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட அங்கன்வாடி குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ற உயர வளர்ச்சி மற்றும் வயதிற்கேற்ற எடை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தேசிய குழந்தை நலத்திட்டம் (RESK) மருத்துவ குழு, சிவகங்கை மாவட்ட ஆரம்ப தலையீடு மையம் (DEIC) மருத்துவ குழு மூலமாகவும் ஆய்வு செய்யப்பட்டதில் 1,852 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் என கண்டறியப்பட்டனர்.மேற்கண்ட அங்கன்வாடி குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற சிறப்புத் திட்டத்தினை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அறிவிப்பு செய்து, அத்திட்டத்தின் கீழ் 0-6 மாத குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்வதற்கென, அக்குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கத்தினையும், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை சீர் செய்வதற்கு, உடனடியாக பயன்படுத்தக்கூடிய சிறப்பு உணவு ஊட்டச்சத்து பொட்டலங்களையும் வழங்கும் திட்டத்தினையும், கடந்த 28.02.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள மேற்கண்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்குவதற்கென 1,301 ஊட்டச்சத்து பெட்டகங்களும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த 99,900 உடனடியாக சாப்பிடும் வகையிலான சிறப்பு உணவு ஊட்டச்சத்து பொட்டலங்களும் பெறப்பட்டு, அவர்களுக்கு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இச்சிறப்பு திட்டத்தின் கீழ் பிறந்தது முதல் 6 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிவதற்காக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதார துறையின் RBSK குழுவும் இணைந்து அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜீன் மாதம் வரை மருத்துவ முகாம் நடத்தினர். அவ்வாறு நடைபெற்ற மருத்துவ முகாமில் நோய் குறைபாடு கண்டறிப்பட்ட குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக, மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும், இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1,301 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு, அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டது. அதேபோன்று, 7 மாதம் முதல் 6 வயது வரையிலான 3,185 குழந்தைகளுக்கு சுருவுகு என்ற குழந்தைகள் சப்பி சாப்பிடும் வகையிலான சிறப்பு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்டுகள் 56 நாட்களுக்கு வழங்கப்பட்டு, தினசரி சாப்பிட வைத்து, அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தற்போது முதல் வருகின்ற 15.06.2023 வரை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையின் RBSK குழுவும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். அதன்படி, அங்கன்வாடி பணியாளர்களால் TNICDS செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறந்தது முதல் 5 வயது வரையிலான பயனாளி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை RBSK மருத்துவ குழுவால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோரிடம் RBSK மருத்துவக் குழுவால் 49 மருத்துவ ரீதியிலான நோய் குறைபாடு கண்டறியும் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதேபோல், மாற்றுத்திறனாளி குழந்தைகளாக இருப்பின், அவர்களின் பெற்றோரிடம் கூடுதலாக 10 மருத்துவ ரீதியிலான நோய் குறைபாடு கண்டறியும் கேள்விகள் கேட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்து நோய் கண்டறியப்பட்டு அதன் விவரங்களும், குழந்தைகளின் தற்போதைய ஊட்டச்சத்து நிலையும் மருத்துவக் குழுவினரால் EMIS செயலியில் பதிவு செய்யப்பட்டு நோய் குறைபாடுடைய குழந்தைகள் தொடர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இவ்வாறாக, மாவட்டம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ முகாம் தொடர்பாக, இன்றையதினம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் விதமாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற சிறப்புத் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தி, குழந்தைகளின் நலன் காத்து வருகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜீத்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி திருமகள் உட்பட பலர் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.