கோடை வெயிலால் வாழைப்பழங்கள் விரைவில் பழுத்து அழுகுவதால் நஷ்டம்:வியாபாரிகள் கவலை!
1034 views
Subscribe தமிழ்நாடு videosஎந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.கோடை கால துவகத்தில்,கோடை மழை பெய்து சற்று ஆறுதல் அளித்திருந்தாலும் கூட அக்னி நட்சத்திரம் துவங்கிய பின்னர் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தொட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதிக வெயிலின் தாக்கம் காரணமாக வாழைப்பழ விற்பனையில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.தேனி,கரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை மொத்தமாக வாழைப்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது செவ்வாழை 1 கிலோ ரூ 35 -40க்கும் அதேபோல பச்சைவாழை ரூ10 -12கற்பூரவள்ளி 15-18,ரஸ்தாளி ரூ 20 -22, நாளிபூவன் ரூ 20- 25 என்ற விளக்கி கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் தற்பொழுது வெயிலின் தாக்கத்தால், ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் இறக்குமதி செய்வதற்கு உள்ளே முழுவதுமாக பழுத்து விடுகிறதாம். வழக்கமாக சாதாரண நாட்கள் மற்றும் மழைக்காலங்களில் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களை இறக்குமதி செய்து பின்னர் சுமார் ஒரு வார காலத்திற்கு இருப்பில் வைத்து விற்கலாம் ஆனால், தற்பொழுது இரண்டு நாட்களுக்குக் கூட அவை தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு கோடை வெயில் வாட்டி வதைக்கிறது எனவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மொத்தமாக கொள்முதல் செய்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் அழுகி வீணாவதால் பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அழுகிய மற்றும் வீணான பழங்களை குப்பையில் கொட்டும் வியாபாரிகள் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.