கன மழை காரணமாக பாறைகள் உருண்டதில் குடிநீர் குழாய் உடைந்து மலைக் கோவிலுக்கு பக்தர்களுக்கு குடி தண்ணீர்!
1076 views
Subscribe தமிழ்நாடு videosஅறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கோடைகால நீர்தேக்கம் , பாலாறு அணையில் இருந்து 22 கோடி மதிப்பில் புதிதாக அணையிலிருந்து பழனி மலைக்கு மேலே பக்தர்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு ஏழு லட்சம் லிட்டர் தண்ணீர் பழனி மலை கோயிலுக்கு செல்கிறது. . , இந்த நிலையில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மலைக்கோவிலில் இருந்து 200 அடி பாறையில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணி தொட்டி அருகே பழனி மலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லும் பைபிள் பாறை உருண்டு விழுந்ததில் பைப்புகள் சேதம் அடைந்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் அடிப்படை வசதிகளும் தேவையான தண்ணீர் ஆகியவை அவர்களுக்கு கிடைப்பதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்பு பயன்படுத்தி வந்த குடிநீர் குழாய் மூலம் தற்போது குடிதண்ணீர் தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவில் ஊழல்கள் பைபுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறிய அளவிலான பாறை உருண்டு விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது