காரைக்குடியில் இந்திய மருத்துவ கழகத்தின் தென்மண்டல மாநாடு மருத்துவர்கள் பங்கேற்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தென்மண்டல மருத்துவர்களின் மாநாடு இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநாட்டிற்குகடலூர் விழுப்புரம் திருச்சி தஞ்சாவூர் ,கடலூர் ,விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை,நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 175 ற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.மாநாட்டின் முடிவில், சிறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,2010ல் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்களை ஊராட்சி நிர்வாகங்கள் புதுப்பிக்க நிப்பந்திக்க கூடாது,உரிய மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்துகள் விற்கும் கடைகளை கண்டறிந்து அதன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டை மாநில மருத்துவக் கழகத்தின் தலைவர் செந்தமிழ் பாரி தலைமையேற்று நடத்தி வைத்தார்.tamilnaduTimesXP TamilUpdated: 22 May 2023, 1:59 pm - TimesXP Tamil
- tamilnadu
- Doctors Participated In The Southern Conference Of The Indian Medical Association In Karaikudi!