சிவகங்கையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான கிக்-பாக்ஸிங் போட்டிகள்
1037 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கையில் முதல்முறையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான் கிக் பாக்ஸிங் போட்டிகள் சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் கண்டாங்கிப்பட்டியில் உள்ள மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளியில் நடைபெற்றன.கிக் பாக்ஸிங் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமாகி வரும் தற்காப்பு கலை ஆகும். கராத்தே, முய்-தாய், சாண்டோ போன்ற பல்வேறு தற்காப்புகலைகளின் பாணிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட இக்கலையினை முறையாக பயின்ற மாணவர்களுக்கிடையேயான மாநில அளவிலான போட்டிகள் வருகின்ற 26,27,28 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. அதில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட அளவிலான வீரர்களை தேர்ந்தெடுக்கும் விதமாக பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.7முதல் 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பிரிவு, 12 வயதிற்குட்பட்ட எங்கர்கேடட், 15வயதிற்குட்பட்ட ஓல்டர்கேடட், 18வயதிற்குட்பட்ட ஜூனியர் பிரிவு, 19வயதிற்கு மேற்பட்ட சீனியர் பிரிவு என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு பள்ளிநிர்வாகத்தின் சார்பில் 50% வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.விழாவிற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் மாநில துணைத்தலைவர் சதீஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், இந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு மற்றும் கலைகள் அசோசியேசன் தேசிய செயலாளர் ரென்ஸி.பரமசிவம், இடையமேலூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான போட்டிகளை மௌண்ட் லிட்ரா பள்ளி கலைப்பிரிவு திட்ட இயக்குநர் கங்கா கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.பெற்றோர்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட போட்டிகளுக்கு சென்னை, திருச்சி, செஞ்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் நடுவர்களாக கலந்துகொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.அனைத்து ஏற்பாடுகளையும் சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் குணசீலன், இணைச்செயலாளர் விக்கேனஸ் பூபதி சிறப்பாக செய்திருந்தனர். இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குகின்ற விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையான 2லட்சம் பெற வாய்ப்புள்ளதாக விளையாட்டு போட்டிகளை நடத்திய நிர்வாகிகள் தெரிவித்தனர்.