தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்!
1057 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் துவக்கி வைத்து விற்பனையை தொடங்கினார்.இதனைத் தொடர்ந்து மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், திமுக நகர செயலாளர் சாரதி குமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.