குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்!
1044 views
Subscribe தர்மபுரி videosதருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஒரு மாதமாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் நான்கு நாட்களாக வழங்கப்படவில்லை. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள் உள்பட அணைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவித்து உடனடியாக தங்கள் கிராமத்திற்கு வரும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கெட்டுஅள்ளி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறப்பிடித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 06:30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் அதிகாரிகள் சுமார் 10 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளதாக தெரிவித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பொதுமக்கள் கலைந்து சென்றனர் .