ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசிக வாக்குவாதம் சமாதானம் செய்த எம்பி!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட. கடத்தூரில் புதிய ஊராட்சிஒன்றிய கட்டிடம் திறப்பு விழா இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளதால் அதற்காக மாவட்ட ஆட்சியர் சாந்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். அதிமுக எம்எல்எ கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது விழா நடைபெறும் நுழைவாயிலில் அதிமுக சார்பில் முன்னாள்முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும் திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலிக்கு நன்றி என பேனர் வைத்துக்கொண்டனர். பேனர் வைத்ததில் திமுக அதிமுக இருகட்சியினரிடையே சலசலப்புஏற்பட்ட நிலையில் அப்பகுதி விசிகவை சேர்ந்த ஊராட்சிமன்ற துணைதலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என விசிகவினர் விழா நடைபெறும் அருகே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இது கட்சிநிகழ்ச்சியா அரசு நிகழ்ச்சியா அதிமுக திமுகவினர்பேனர் வைத்துள்ளனர். எனவும் அதிகாரிகள்மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தவிற விழாவை விட்டு மற்ற கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என விசிகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனனால் அப்பகுதில் அசம்பாவிதம்ஏற்படும் சூழல் நிலை ஏற்பட்டதால் உடனடியாக அங்கு போலீஸார் பாதுப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட விசிகவினரை சமாதானம் செய்து விழாவிற்குள் அழைத்து சென்றார் அப்போது அங்கு அமர்ந்திருந்த அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ திடிரென வெளியேறினார் இதனால் அரசு விழாவில் ஒருமணி நேரத்திற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.dharmapuriTimesXP TamilUpdated: 10 May 2023, 3:40 pm