வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
1055 views
Subscribe தர்மபுரி videosதருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கடத்தூர் அருகே சில்லாரஹள்ளியில் கிராமத்தில் உள்ள வீரபத்திர சுவாமியை அங்குள்ள குருமன்ஸ் இன மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் இந்த நிலையில் வீரபத்திர சுவாமிக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் திருவிழா நடத்தி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம் இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோவில் தர்மகர்த்தா சேகர் தலைமையில் கோயில் திருவிழா நடைபெற்றது.இந்த விழாவின் சிறப்பு நிகழ்வாக வீரபத்திர சுவாமிக்கு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நடைபெற்றது .இதில் சில்லாரஹள்ளி ,மோளையானூர் , மூக்காரெட்டிப்பட்டி, ரேகடஹள்ளி,மோரூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிக்கு பல்வேறு பூஜை செய்து தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்