மனிதக் கழிவுகளை அள்ளிய மனிதர்கள்; ஷாக் வீடியோ
1032 views
Subscribe தர்மபுரி videosமனிதர்கள் நாகரிக வாழ்வில் எங்கேயே வளர்ந்து வந்துவிட்டனர். ஆனால் கழிவுகளை அகற்றும் விஷயத்தில் இன்னும் இயந்திரங்களின் உதவியை நாடாமல் மனிதர்களை ஈடுபடுத்தும் அவலநிலை தொடர்கிறது. இதுதொடர்பாக கடும் சட்டங்கள் அமலில் இருந்தாலும் ஆங்காங்கே நடக்கும் துயரங்களை தவிர்க்க முடிவதில்லைஇந்நிலையில் தருமபுரியில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அந்த மாவட்டத்தின் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஹள்ளி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கின்றனஅவர்கள் கழிப்பறையை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். முன்னதாக பழைய கழிவறையில் உள்ள மலத்தை அள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர். அப்போது தூய்மை பணியாளர்கள் இருவரை வரவழைத்து அவர்களை கொண்டு மலத்தை அள்ளியதாக சொல்லப்படுகிறது. அவர்களும் கைகளால் அள்ளி போட்டுள்ளனர்