கொடைக்கானலில் புதிய மகளிர் காவல்நிலையம்:காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி.சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
1038 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மகளிர் காவல்நிலையம் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 84,70,000 மதிப்பீட்டில் முதலியார்புரம் தெரு பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவீன வசதிகளுடன் பணிகள் நிறைவடைந்து,புதிய மகளிர் காவல் நிலையத்தினை இன்று காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்கள் திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அபினவ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள் இணைந்து ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கினையும்ஏற்றினர், மேலும் காவல்துறை துணை தலைவர் அபினவ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த மகளிர் காவல் நிலையம் நவீன வசதியுடன் மலைக்கிராம பொதுமக்களுக்கும் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் தங்கள் சுற்றுலாவினையும் எந்த வித இடையூறுமின்று பாதுகாப்பாக கண்டு ரசிக்கும் வகையில் செயல்படும் எனவும், குறிப்பாக கொடைக்கானல் நகர் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள மகளிர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை துரிதமாக சரி செய்ய இன்று திறக்கப்பட்ட மகளிர் காவல் நிலையம் பேருதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார், இதன் முன்னதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பாதுகாப்புகள் குறித்தும் கேட்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது.