முருகன் கோவிலுக்கு ஒரே வண்ண உடையணிந்து தீர்த்தம் குடத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள் !
நாமக்கல் அடுத்துள்ள மோகனூரில் உள்ள புகழ்பெற்ற காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலுக்கு சஷ்டி திருநாளை முன்னிட்டு காட்டூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக காட்டூர் பகுதிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்றனர். இதில் குறிப்பாக பக்தர்கள் ஒரே வண்ண உடையணிந்து ஆண்கள் மற்றும் பெண்களின் கொங்கு பாராம்பரிய ஒயிலாட்டமும் காவடி ஆட்டத்துடனும் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த புனித நீர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த தீர்த்த குடம் ஊர்வலத்தில் பாராம்பரிய நாட்டு மாடுகளும் குதிரையுடனும் ஊர்வலமாக சென்றது குறிப்பிடத்தக்கது.tamilnaduTimesXP TamilUpdated: 25 May 2023, 12:11 pm - TimesXP Tamil
- tamilnadu
- Devotees Dressed In The Same Color And Took The Tirtha Pot In A Procession To The Murugan Temple