ஒரே கோவிலில் மூன்றாவது முறையாக திருட்டு சம்பவம் பக்தர்கள் அதிர்ச்சி.!!!
1027 views
Subscribe தமிழ்நாடு videosசிங்கம்புணரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலின் உண்டியல் கொள்ளை பக்தர்கள் அதிர்ச்சி. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று காலை கோவில் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் கோவிலை திறந்து அன்றாட பூஜை பணிகளை துவக்குவதற்காக கோவிலை திறந்தார்.அப்பொழுது கோவிலில் அமைந்துள்ள சாய்பாபா சன்னதியின் முன் வைக்கப்பட்டிருந்த ஒரு அடி உயரம் உள்ள சில்வர் உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவில் நிர்வாகி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உண்டியலில் இருந்த தொகை எவ்வளவு எவ்வாறு திருடு போனது என விசாரித்து வருகின்றனர்.இதே கோவிலில் மூன்றாவது முறையாக திருடுச் சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முந்தைய இரண்டு சம்பவங்களுக்கும் தீர்வு காணப்படாத நிலையில் மூன்றாவதாக இன்று நடைபெற்ற சம்பவத்தால் பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ரோந்து பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.