479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி கட்டும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்
1038 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினை ஆதாரமாகக் கொண்டு பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நகராட்சி, 4 பேரூராட்சி, 625 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இந்த கூட்டு குடிநீர் திட்டம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணி முடிந்தவுடன் இதன் மூலம் ஒரு நாளைக்கு 31.26 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளனர் இந்த நிலையில் இன்று கூட்டுக் குடிநீர் தொட்டி கட்டும் பணியினை நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார் அவருடன் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நகராட்சி குடிநீர் வடிகால் வாரிய முதன்மை செயலர் சிவதாஸ் மீனா.நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன். வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி. விருத்தாசலம் திமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வட்டாட்சியர் அந்தோணிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உடன் இருந்தனர்.