தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் விருத்தாசலத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு நடைபெற்றது!
1071 views
Subscribe கடலூர் videosவிருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் இன்று விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் இடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தமிழ்நாடு போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது. விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களில் இருந்து 31 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 220 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன.இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி, சிசிடிவி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கும்போதும் ஏறும் போதும் சரியாக கவனித்து வாகனங்களை இயக்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளும் விதத்தில் முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது.இதில் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் லூர்துசாமி, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.