கயிற்றைத் தாண்டி வாகனங்களை நிறுத்தினால் ஆயிரம் ரூபாய் அபராதம்:போலீசார் அதிரடி எச்சரிக்கை!
1050 views
Subscribe கடலூர் videosசிதம்பரம் நகருக்கு நாள்தோறும் ஆயிரம் கணக்கான பொதுமக்கள், கூலி தொழிலாளிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வந்து செல்கின்றனர், குறிப்பாக பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பொதுமக்கள், ரயில்வே நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் என பெரும்பாலான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக பேருந்து நிலையம் அமைந்துள்ளது, இந்த பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள சாலை இரு புறமும் அதிக அளவு இருசக்கர வாகனங்கள், கார், போன்றவைகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது, அதனை தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் பேருந்து நிலையம் இருபுறமும் கயிறு அடித்து வாகனங்கள் கயிற்றைத் தாண்டி வெளியில் வரக்கூடாது, எனவும் அப்படி இருக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதேபோன்று சிறுகுரு கடை வைத்திருப்பவர்கள் கடைக்கு வருபவர்கள் வாகனங்களை கயிற்றை விட்டு வெளியே நிறுத்த வேண்டாம் என கூற வேண்டுமெனவும் அபராதம் வாகன ஓட்டிகளுக்கு தான் பிரச்சனை நமக்கு எதுவும் இல்லை என்று அலட்சியமாக செயல்பட்டால் தாங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் மற்றும் சிதம்பரம் நகர போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்,பேருந்து நிலையம் அருகில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் இடையே மிகவும் வரவேற்பை பெற்றது.