ஸ்ரீமுஷ்ணம் வெள்ளாற்றின் அணைக்கட்டில் முதலைகள்-பொதுமக்கள் அச்சம்!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாளற்றில் முதலைகள் ஏராளமாக இருந்து வருகின்றன. தற்போது முதலைகள் அதிக அளவில் இருந்து வருவதால் ஆற்று நீரில் மீன்களைப் பிடித்து வரும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் ஆற்றுத்தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆற்று நீரில் உலா வரும் முதலைகள் திடீர் திடீரென மணல் திட்டில் வந்து படுத்து கிடப்பதால் அதைக்காணும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அணைக்கட்டு மேல் பகுதியில் நின்று வேடிக்கை பார்த்து வருவதால் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஆற்றில் உலா வரும் முதலைகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறைக்கு கோரிக்கை வைத்தும் வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர் மேலும் தற்போது ஆபத்தை அறியாமல் அப்பகுதி சிறுவர்கள் சென்று மணல் திட்டில் அமர்ந்து விளையாடி வருவதும் ஆபத்து ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.cuddaloreTimesXP TamilUpdated: 21 Apr 2023, 5:38 pm