மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்!
1041 views
Subscribe கடலூர் videosமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்யக்கோரி சிதம்பரத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம். 50 பேர் கைது.நாட்டுக்காக பதக்கம் பெற்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் வீராங்கனைகள் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் கஞ்சிதொட்டிமுனை பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சிதம்பரம் நகர போலீசார் அவர்களை கைது செய்தனர்.