அண்ணாமலை பல்கலைக்கழக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளை, இருசக்கர வாகனங்கள் திருட்டு!சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு சுமார் 7:00 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மெயின் லைப்ரரி முன்பு மாணவர்கள் சைக்கிள் நிறுத்தி உள்ளனர், அப்போது நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சைக்கிள் ஒன்றை அல்லாக்காக தூக்கி இருசக்கர வாகனத்தில் வைத்து திருடி சென்ற சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, மேலும் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பொது மக்களின் இருசக்கர வாகனங்கள் சைக்கிள் திருடு போவது தொடர் கதையாகி வருவதால் போலீசார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டுமென மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.