அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில் மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!!
1053 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டம்,விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இவ்வருடம் மூன்றாம் ஆண்டு ஆறாவது செமஸ்டர் தேர்வு,சுமார் 1200 மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மூலம் தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில், ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு கட்டணம் 3,000 ரூபாய் செலுத்த கோரி அறிவிப்பு வெளியாகி,கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி வரும் நிலையில்,தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாளான இன்று,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு (ரிசிப்ட்,) ஒப்புகைச்சீட்டு வரவில்லை,தேர்வு எழுத வேண்டிய பாட எண் வரவில்லை,சர்வர் பிரச்சினையால் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளதாகவும்,தேர்வு கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என்று கூறி,3 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு, அங்கு வந்த கல்லூரி முதல்வர் ராஜவேல் கல்லூரி மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.