"எங்களுக்காகத்தான் கவர்மெண்ட்" ஓடும் பஸ்'சில் வாக்குவாதம்!"எங்களுக்காகத்தான் கவர்மெண்ட்" ஓடும் பஸ்'சில் வாக்குவாதம்!கடலூர் அருகே பெண் பயணிகளுக்கான மரியாதை கிலோ என்ன விலை என்று கேட்கத் தோன்றுகிறது வெளியான வீடியோவால் பரபரப்புகடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் பெண் பயணிகள் ஏறுவதற்கு பேருந்தை நிறுத்தாமல் வேக வேகமாக எடுத்துச் செல்ல முயன்ற பேருந்து நடத்துனர், அந்தப் பேருந்தில் உயிரை பணயம் வைத்து கைக்குழந்தையோடு ஏறிய பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பெண் பயணியுடன் வந்த மற்ற வயதானவர்கள் பேருந்து நிறுத்தத்திலேயே இருப்பதாகவும் பேருந்தை ஏன் இவ்வளவு வேகமாக எடுத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டபோது பேருந்து நடத்தூனர் பெண் பயணியை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு பெண் பயணியும் நடத்துநரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இருவருக்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே சென்றது அதே பேருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஒரத்தூர் பகுதியில் சென்றபோது அங்கே பயணியின் உறவினர்கள் பேருந்தை சூழ்ந்து கொண்டு ஏன் பேருந்தை நிறுத்தாமல் வேக வேகமாக எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டபோது கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இத்தனைக்கும் பேருந்தில் கூட்டமே இல்லை சொற்ப அளவில் பயணிகள் இருந்தனர்.அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் எங்களுக்காக தன் கவர்மெண்ட் உங்களுக்காக அல்ல என்று கேட்கிறார். தற்போது இந்த வீடியோ வெளியாகிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.விடியா அரசின் அரசு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு கிடைக்கும் மரியாதையை பார்க்கும்போது பலரையும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர் சம்பவமாகவும் இருந்து வருகிறது.