கடலூரில் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர் சந்திப்பு.!
1032 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் விற்கப்பட்ட 130 சவர நகைகள் மற்றும் திருடப்பட்ட மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு புலன் விசாரணை பிரிவு போலீசார் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது.தமிழக எல்லையில் 26 சோதனைச் சாவடிகள் உள்ளன, எல்லைப் பகுதிகளில் ஏற்படும் குற்றச் சம்பவங்களை குறைக்க மற்ற துறைகளோடு இணைந்து 16 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும்,கள்ளச்சாராயம் தொடர்பாக எத்தனை குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பதில் அளித்தார்.மேலும் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் அவ்வப்போது நிரப்பப்பட்டு பணியிடங்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருப்பது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.