இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
1034 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில்வேப்பூர் வட்டம் இலங்கையனூர் ஊராட்சியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆ திதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஆதிதிராவிடர் மக்களின் பிரதான கோரிக்கை இலவச வீட்டு மனை பட்டா ஆகும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும் சார்ஆட்சியரிடமும், வருவாய் வட்டாட்சியரிடமும், மனு கொடுத்தும்எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும்.இலங்கையனூர் ஊராட்சிஆதி திராவிட பொதுமக்கள் மிகவும் இடைவெளி இல்லாத வீடுகளிலும் சாலைகளும் கொண்ட நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்,மேலும் ஒரு வீட்டில் இரண்டு மூன்று அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாலும் மாற்று குடியிருப்பு இல்லாததால்ஆதி திராவிட மக்கள் அரசு கட்டிடம் பொது இடங்களில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும்அவல நிலை உள்ளதுபலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அரசு அதிகாரிகளையும் தமிழக அரசின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கண்டன முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய கவுன்சிலர் குமாரி கோவிந்தசாமி தலைமையில் சௌந்தரராஜன், செந்தில்குமார்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தவமணி பிரேம்குமார், விடுதலை சிறுத்தை கட்சியின் நல்லூர் ஒன்றிய நிர்வாகி மகேந்திரன்.ஆகியோர் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் அசோகன். நகர செயலாளர் கலைச்செல்வன்,, ,இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகி மங்கா பிள்ளை, விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் திராவிட மணி. ஊடகப்பிரிவு ராஜ்குமார். மாவட்ட தலைவர் கதிர்வேல் ,ஆதி அறக்கட்டளை சேப்பாக்கம் பிரகாஷ். பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் அய்யாசாமி விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் முருகன். ,ஆகியோர் கண்டன உரையாற்றியஆர்ப்பாட்டத்தில்ஏராளமான ஆதிதிராவிட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இறுதியில் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.