குடிநீர் விநியோகிக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!
1031 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ஊராட்சி விரிவாக்கம் கற்பக விநாயகர் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் உருவாகி 13 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள தெரு பகுதிகளுக்கும் விவசாய விலை நிலங்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் அவர்கள் வழக்கமாக தண்ணீர் பிடிக்கும் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்தது. விவசாய விளை நிலங்களுக்கு சென்று குடிநீர் எடுத்தாலும தண்ணீர் பிடிக்கக் கூடாது என தனிநபர்கள் பிரச்சனை செய்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கற்பக விநாயகர் நகர் உருவாகி 13 வருடங்கள் ஆகியும் குடிநீர் மற்றும் சாலை, தெரு மின்விளக்கு வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.