சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்ப்பு!
1071 views
Subscribe கடலூர் videosசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்டவை தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இங்கு கடந்த சில மாதங்களாகவே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் முடிவடைந்த ஏப்ரல் மாதத்திற்கான மாத ஊதியம் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனை முன்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுருநாதன்.ஒவ்வொரு மாதமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக மாதாந்திர ஊதியத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் காலதாமதமின்றி குறித்த நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கூறினார்.