விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் தேர் கவிழ்ந்தது - ஒருவர் படுகாயம்!
Subscribe கடலூர் videos
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரம் தேரில் வீதி உலா வந்தார்.அப்போது தெற்கு பெரியார் நகரில் வீதி உலா வந்து கொண்டிருந்த போது, ரோட்டோரத்தில் இருந்த மாமரத்தில் சப்பரம் தேர் சிக்கிக் கொண்டு, திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் தேரை தள்ளிக் கொண்டு வந்த, நாச்சியார் பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் வினோத்குமார் லேசான காயம் அடைந்து, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.மேலும் சப்பரம் தேர் கவிழ்ந்தவுடன், உடனடியாக அங்கிருந்தவர்கள் கவிழ்ந்த சப்பரத்தின் தேரை நிமிர்த்தினர்.பின்னர் மீண்டும் வீதி உலா நடைபெற்றது.சுவாமி வீதி உலா வந்த சப்பரம் தேர் கவிழ்ந்த சம்பவம் விருத்தாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.