சிதம்பரம் அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து
1010 views
Subscribe கடலூர் videosவங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது, கடந்த சில தினங்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் இன்று பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த கேசவராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த குட்டியாண்டி, சுப்பிரமணி, தட்சிணாமூர்த்தி, முனுசாமி, ஆகிய ஆறு பேரும். அதிகாலையில் மீன் பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பிக் கொண்டிருந்தபோது அன்னங்கோவில் கடல் முகப்பு துவாரத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கடலில் தத்தளித்த போது பின் தொடர்ந்து வந்த மற்ற மீனவர்கள் கடலில் தவித்த ஆறு பேரையும் காப்பாற்றி கரைத்துக் கொண்டு வந்தனர், மேலும் கடலில் மூழ்கிய படகை மூன்று படகு கொண்டு கரைக்கு இழுத்து வந்தனர்,படகில் பிடித்து வந்த மீன்கள் மற்றும் படகில் இருந்த பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 60 ஆயிரம் ரூபாய் நசம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் படகில் சென்ற ஆறு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக ஊர் தொப்பி உள்ளனர், படகு கவிழ்ந்த சம்பவம் மீனவர்கள் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.