கடலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள அருண் தம்புராஜ் !
1042 views
Subscribe கடலூர் videosகல்வி,மருத்துவம் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஆட்சியராக அருண் தம்பு ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கல்வி,மருத்துவம் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கடலூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் விவசாயம் சார்ந்து இருப்பதால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.