டீக்கடையில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் குடித்ததால் விரட்டியடித்தனர்!
1051 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன்.இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார். இவர் விருத்தாசலத்தில் பணி முடித்துவிட்டு நேற்று மாலை சுமார் 3மணியாளவில் வீட்டிற்கு வந்துள்ளார், பின்னர் தனது 5வயது பேரன் சித்தார்துடன் டீ குடிப்பதற்காக மங்களம்பேட்டை ஆப்பிள் டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் தண்ணீர் அருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குடுவையில் தண்ணீர் பிடித்து கவ்வி குடித்ததால் சிறுவன் சித்தார்த்தை திட்டியாதாகவும்,அதனை தட்டிகேட்ட சிறுவனின் தாத்தாவை அங்கே அமறுவதற்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியால் அடித்துள்ளதால் கையில் அடிபட்டு மங்களம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று பின்னர் கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது மங்கலம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் கடையின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.