கள்ளத்தனமாக கஞ்சா விற்பனை செய்த 7 பேர் கைது
1046 views
Subscribe கடலூர் videosசிதம்பரம் நகரில் அரசு மதுபான கடை மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரகுபதிக்கு ரகசிய தகவல் வந்தது அதன் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர்கள் சங்கர், லட்சுமிராமன், மற்றும் தனிப்படை போலீசார் ரயில்வே நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது ரயில்வே நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் சேர்ந்த ஹவுஸ்பாஷா,பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிதம்பரத்தை சேர்ந்த தியாகராஜன் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த ராஜா, உள்ளிட்ட மூவரிடமிருந்து சுமார் 188 மதுபான பாடல்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அதேபோன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விக்ரம்,ரவி, செல்வம், பெண் உட்பட 4 பேரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர், இவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையான போலீசார் அதிரடியாக இன்று மது பாட்டில் மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடைய வரவேற்பு பெற்றுள்ளது.