பாஜக அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.
1041 views
Subscribe தமிழ்நாடு videosராகுல் காந்தியின் எம்பி தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை மேற்க்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி இழப்பை கண்டித்து இன்று திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தொலை தொடர்பு அலுவலகத்தின் முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை தெற்கு மவாட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி இழப்புக்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்றும்,அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து ராகுல்காந்தி பிரதமராவார் என்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் குமார் தெரிவித்தார்.