தொழிலாளர்கள் கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
1063 views
Subscribe கோவை videosதேசிய பஞ்சாலை கழகத்தின் என்டிசி ஆலைகளின் தொழிலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் கோவை புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள என்டிசி பஞ்சாலையின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும்,தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், முழு சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும்,மூன்று ஆண்டு போனஸ் இதர பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதனை தொடர்ந்து பேசிய இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தமிழக அரசு நிதியிலிருந்து என்டிசி தொழிலாளர்களுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும்,அதே போல் போராட்டத்திற்கு மத்திய அரசு நிரவேற்றவிட்டால் மத்திய அமைச்சர்கள் தமிழகம் மற்றும் கோவைக்கு வரும்போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.