கணவன் நினைவாக வகுப்பறை கட்டிய மனைவிகணவன் நினைவாக அரசுப்பள்ளிக்கு வகுப்பறை கட்டி கொடுத்த மனைவி..கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இறந்து போய் உள்ளார். இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். திடீரென கணவன் இறந்த நிலையில் மணிமுத்து அவர் நிர்வகித்து வந்த கட்டுமான தொழில் நிறுவனத்தை முன் நின்று நடத்தி வருகிறார். இந்நிலையில் பட்டணம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பள்ளி கட்டிடம் இல்லாமல், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு தனது கணவன் நினைவாக மணிமண்டபம் கட்டாமல் வகுப்பறை , கட்டிக் கொடுக்கலாம் என நினைத்த மணிமுத்து தனது சொந்த செலவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது கணவன் நினைவை போற்றும் விதமாக தரமான பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி கட்டிடமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை மணிமுத்து ரிப்பன் வெட்டி பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார் . உடன் பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், பீடம் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் குமாரவேலு மற்றும் திமுக இலக்கிய அணி செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து பேசிய மணிமுத்து,கணவன் நினைவாக மாணவர்களுக்கு வகுப்பறையை கட்டிக் கொடுத்ததாக தெரிவித்தவர் அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறையாக இருக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பணம் உள்ள பொதுமக்கள் அரசு பள்ளிகளுக்கு இது போன்ற உதவிகளை செய்ய வர வேண்டும் என தெரிவித்தார்.