கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக செய்து அசத்தல்
கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக செய்து அசத்தல்
கோவையை பெருமைபடுத்தும் விதமாக காதணி விழாவிற்கு கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.பொதுவாக திருமண விழா,காதணி விழா பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா,பிறந்தநாள் விழா, உள்ளிட்ட விழாக்களில் சிறு வரிசை என்றாலே பூக்கள் பாக்கு வெற்றிலை பழங்கள்,பல்வேறு இனிப்பு வகைகள், ஆடைகள், என தாம் பாலா தட்டுகளில் அணிவகுத்து எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் புதுவிதமான சீர்வரிசைகள் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த காதணி விழாவிற்கு கோவையில் அடையாள சின்னங்களான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனர். கோவையை பொருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாள சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்த சண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாக தெரிவித்தனர்.கோவையின் அடையாள சின்னங்களான கோவில்கள், சுற்றுலா பொழுதுபோக்கு தளங்கள் கொண்ட சீர்வரிசையை அணிவகுத்து எடுத்து வந்தது அனைவரையும் சிலிர்க்க வைத்தது.Updated: 5 Jun 2023, 12:21 pm