கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை.!
1067 views
Subscribe கோவை videosகோவை ரயில் நிலையம் அருகே தகராறில் ஈடுபட்டு வந்த கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து பந்தய சாலை போலீசார் விசாரணை.! கோவை ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான கொலை குற்றவாளிகள் மூன்று பேரை பிடித்து பந்தை சாலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் சமீபமாக கொலை குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சந்தேகப்படும் நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொள்கின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக மூன்று பேர் குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற பந்தய சாலை போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில்அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ், மகேஷ், பசும்பொன் ஆகியோர் எனவும் இவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.இதில் மகேஷ் மற்றும் சுபாஷ் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் உள்ள நிலையில் மூன்று பேரும் கோவை வந்துள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பசும்பொன் என்பவர் இவர்களுடன் கூட்டாளியாக இருந்து வரும் நிலையில் தற்போது பந்தய சாலை காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவையில் திட்டங்கள் ஏதும் அரங்கேற்றுவதற்காக மூன்று பேர் வந்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.