கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
1032 views
Subscribe கோவை videosகோவை மருதமலை சாலை முல்லை நகர் அருகில் கருப்பராயன் திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் இக்கோவில் செய்ல்பட்டு வருகிறது. இன்று விடியற்காலை 4.30 மணியளவில் காவலுக்கு இருந்த கோவிந்தராஜ் என்ற இரவு காவலர் சத்தம் கேட்டு சென்று பார்த்து உள்ளார். அங்கே ஒருஉண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதே சமயத்தில் கோவில் பூசாரி கோவில் நடை திறக்க வந்து உள்ளார். அவரிடம் நடந்ததை கூறி உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து துணியில் பணத்தை சுற்றி எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதை கைப்பற்றினர். மேலும் உண்டியலை உடைக்க உலி உள்ளிட்டவற்றை பயன் படுத்தி உள்ளனர். கோவில் மதில் சுவர் வரையில் பணம் மற்றும் சில்லைறை காசுகள் சிதறி உள்ளன. மேலும் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு ஆறு மாததத்திற்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் திறக்கப்படும். கடந்த 11 ஆம் தேதி வருவதாக அறநிலையத்துறை தெரிவித்த இருந்த நிலையில் சில காரணங்களால் வரமுடியவில்லை. இந்த நிலையில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதால் கோவில் நடை மூடப்பட்டு உள்ளது.இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.