அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளை-இருவர் கைது!
1069 views
Subscribe கோவை videosகோவை பேரூர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவை சுண்டப்பாளையம், ஹரி ஸ்ரீ கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. இவர் மருதமலை தேவஸ்தானம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். பணி முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு மற்றும் பின்புற கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதனையடுத்து அவர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்(26) என இருவரை கைது செய்துள்ளனர்.பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.