பணத்தை இழந்த பொதுமக்கள் காவல் ஆணையாளரிடம் மனு
1063 views
Subscribe கோவை videosவீட்டுமனை தருவதாக பல லட்சம் வசூல் செய்து மோசடி-ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பணத்தை இழந்த பொதுமக்கள் காவல் ஆணையாளரிடம் மனு- கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், ஸ்ரீ அபிராமி ரியல் எஸ்டேட் பிரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதனை கோவிந்தராஜ், அவரது மனைவி ராமலட்சுமி, மற்றும் அவர்களது குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர். இங்கு மாதத் தவணையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை விற்பனை செய்யப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி பலர் அந்நிறுவனத்தில் 2010ம் ஆண்டில் இருந்து தவணை முறையில் பணம் செலுத்தி வந்துள்ளனர். அவர்களில் சிலர் முழு பணத்தையும் கட்டிய நிலையிலும், கிரைய செலவிற்கான பணத்தை அளித்தும் கூட இடத்தை கிரையம் செய்து கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கும் மேல் பணம் செலுத்திய பலரும் நேரில் சென்று நிறுவனத்தாரிடம் கேட்டுள்ளனர். முழு பணத்தை தந்தவுடன் நிச்சயமாக வீட்டுமனை கிடைத்துவிடும் என கூறுயுள்ளனர். இதனை நம்பி அனைவரும் முழு பணத்தை அளித்த போதிலும் வருட கணக்கில் இடத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர். அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.