கோவை அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள்- பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி
1026 views
Subscribe கோவை videosகோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி எனும் மலை கிராமத்தில் 15 குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இந்த குக்கிராமத்தில், சாலை, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்த போதும், பல ஆண்டுகளாக வீடுகள் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் அக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இந்நிலையில் ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர், அரசின் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, அதிமுக ஆட்சியில் முதற்கட்டமாக 5 வீடுகள் கட்டப்பட்டன. பின்னர் மற்ற பழங்குடி குடும்பங்களும் தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர உதவ வேண்டுமென ஜோஸ்வாவிடம் வலியுறுத்தியதன் பேரில் இரண்டாவது கட்டமாக 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று தமிழ்நாடு அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் 3 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டு அந்த நிதி போதுமான இல்லாத நிலையில், புராபெல் நிறுவனம் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு லட்ச ரூபாய் என 12 லட்ச ரூபாய் உதவியுடன் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவுற்றது. இந்த பணிகளை ராக் அமைப்பின் மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பணிகள் முடிவுற்று 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் புராபெல் வித்யா செந்தில்குமார் , ராக் நிறுவன தலைவர் பாலசுந்தரம், மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.இது குறித்து கண்டிவழி கிராம மக்கள் கூறுகையில், பல ஆண்டுகள் நல்ல வீடுகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டு அரசு மற்றும் தனியார் உதவியுடன் வீடு கட்டி தந்துள்ளார் எனவும் தற்போது கட்டப்பட்டு வீடு நன்றாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனத்தெரிவித்தனர். இதற்கு காரணமான ஜோஸ்வாவிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.